Posts

Showing posts from June, 2024

தமிழ்நாட்டுப் பெண்கள் வீரத்திலும் சலைத்தவர்கள் அல்ல என்பது போல

Image
தமிழ்நாட்டுப் பெண்கள் வீரத்திலும் சலைத்தவர்கள் அல்ல என்பது போல ..... வீரப்பெண்மணிகள் காளையை அடக்குவது போன்ற அழகான ஓவியம். மதுரை to திண்டுக்கல் பயணத்தின் போது ஒரு ஹோட்டலில் வரையப்பட்டிருந்தது.  

இது தான் வாழ்க்கை ! இது தான் பயணம்

Image
  🌹இது தான் வாழ்க்கை ! இது தான் பயணம் ! 🌹ஒருவனுக்கு நான்கு மனைவிகள் இருந்தார்கள். ஆனால் அவன் தனது நான்காவது மனைவியை மட்டும் மிக அதிகமாக நேசித்தான். அந்த மனைவியின் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றினான். அவளுக்கு தேவையானதை எல்லாம் செய்துகொடுத்தான். 🌹அவன் தனது மூன்றாவது மனைவியைக்கூட நேசித்தான். ஆனால் அவளை தனது நண்பர்களுக்கு முன்னால் காட்டிக்கொள்ள பயந்தான். பிறரோடு ஓடி விடுவாளோ என்று பயந்தான். அவன் தனது இரண்டாவது மனைவியையும் நேசித்தான். ஆனால் தனக்கு பிரச்சினைகள் வரும்போது மட்டும் அவளிடம் போவான். அவளும் அவனுடைய பிரச்சினைகளில் உதவினாள். ஆனால் அவன் ஒருபோதும் தனது முதல் மனைவியை நேசிக்கவே இல்லை. ஆனால் அவளோ அவன்மீது மிகவும் நேசம் வைத்திருந்தாள். அவனது எல்லா தேவைகளையும் அவள் கவனித்து கொண்டாள். #ஒரு_நாள். அவன் மரணப்படுக்கையில் விழுந்தான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்டான். தான் இறந்த பின் தன்னுடன் இருக்க ஒரு மனைவியை விரும்பினான். எனவே தன்னுடன் சாக யார் தயாராய் இருக்கிறார்கள் என அறிந்துகொள்ள விரும்பினான். தான் அதிகம் நேசித்த நான்காவது மனைவியை அழைத்தான். அவளோ அதிரடியாக மறுத்துவிட்டு அவனை விட்டு ...

Colorful paintings showing how Tamil people lived many years ago

Image
 

♥அப்பாவின் அன்பான பொய்கள்.

Image
 ♥அப்பாவின் அன்பான பொய்கள்.  ♥மருத்துவமனைதொட்டிலில் நான் முதன் முறையாக அழுதபோது.. கடன்வாங்கி கட்டணம் செலுத்தியதை மறைத்து.. மகாராணி பிறந்திருப்பதாக பொய் சொல்லியும்.. ♥நடந்து பழகுகையில்.. கல்தட்டி விழுந்து அழும்போது.. கல்லை குச்சியால் தட்டி, அந்த கல் , அழுவதாக பொய் சொல்லியும்.. ♥இரவுகளில் பேய்க்கனவு கண்டு.. பாதியில் எழுந்து அழும்போது,,தோள்களில் இறுக்கமாய் அணைத்துக்கொண்டு பேய் ஓடிப்போனதாக பொய் சொல்லியும்.. ♥முதல்நாள் பள்ளியில் அமர்வதற்கு அழுதபோது..இரண்டு தினங்களில், தானும் பள்ளியில் சேரப்போவதாக பொய் சொல்லியும்.. ♥குலதெய்வம் கோவிலில்.. காது குத்திக்கொண்டு அழுதபோது,, இன்றிலிருந்து சாமியோடு "டூ " விட்டுவிட்டதாக பொய் சொல்லியும்.. ♥காய்ச்சலுறும் தருணங்களில்,, ஊசி வேண்டாமென அழும்போது.. மாத்திரை மட்டும் தரச்சொல்லி மருத்துவரிடம் சொல்லியிருப்பதாக பொய் சொல்லியும்.. ♥குறைந்த மதிப்பெண்ணிற்காக, அம்மாவிடம் திட்டு வாங்கிக்கொண்டு அழுதபோது.. வாத்தியாருக்கு படிக்க தெரியவில்லை,, என பொய் சொல்லியும்.. ♥திருமணம் முடிந்து,,, புகுந்தவீடு செல்வதற்கு அழுதபோது.. மகிழ்வோடு வழியனுப்புவதாக  பொய் சொல்லியு...

Anbe Sivam

Image
என் உலகம் ஒன்றும் அவ்வளவு பெரிதல்ல இதோ என் காலடியில் கிடக்குதே  ஒரு சிறிய பந்தை போல அவ்வளவு தான்  அதில்  எத்தனை இரவுகள் எத்தனை பகல்கள் கோடை வெயில் மழைக் குளிர்  மார்கழி பனி இடைக்கிடை பூகம்பங்களும்  புயல்களும் அத்தனையும்  இந்த சிறிய  கோளத்தில்....!!! எல்லாவற்றையும் ஏற்றுத்தான்  வாழ்கின்றேன் எதையும்  மாற்ற எண்ணவில்லை மாறும் என்ற  நம்பிக்கை மாத்திரம்  அடிமனதில் எங்கையோ வேர் இட்டுள்ளது....!!! மாறாவிட்டாலும்  நான் வாழ்ந்து முடித்துவிடுவேன்  இதில் என்ன  அவ்வளவு கஷ்டம்....!! அப்பப்போது வரும் கண்ணீர்களை மட்டும் யாருக்கும் தெரியாமல் தலையனைக்குள்  புதைத்துக் கொள்வேன் அடுதவர் பரிதாபங்கள் மாத்திரம்  என் மனதை ஏனோ அவ்வளவு பாதிக்கும்...!!!! கடந்ததை உடனுக்குடன் மறக்கும்  திறமையெல்லாம் ஏனோ எனக்கு  கிடைக்கப் பெறவில்லை ஆனால்  காலங்கள் மறதி என்னும் மருந்தளித்து  என்னை மெருகேற்றுகின்றது....!!! ஆம்! நான் நேற்றைக் காட்டிலும் இன்று  பலத்துடன்தான் இருக்கின்றேன்  நேற்றைய பிரச்சனைகள்  எல்லாம்  இ...

அம்பாசிடர் கார் ஒரு சிறிய வரலாற்று பார்வை.!

Image
  அம்பாசிடர் கார் ஒரு சிறிய வரலாற்று பார்வை.! இப்போது இருக்கும் தலைமுறையினருக்கு முந்திய தலைமுறையினர் அம்பாசிடர் காரில் பயணிக்காதவர்களே இருக்க முடியாது ஒரு   காலத்தில் இந்தியச் சாலைகளை ஆட்சி செய்தவை ஹிந்துஸ்தான் மோட்டார்ஸின் அம்பாஸடர் கார்கள். பல ஆண்டுகளாக வீதியெங்கும் நீக்கமற நிறைந்திருந்த இதுதான் முதல் இந்திய கார். இதைத் தயாரித்தவர்கள் என்ற பெருமை ஹிந்துஸ்தான் மோட்டார்ஸை சேரும். பிரதமர் முதல் சாமான்ய மனிதன் வரை அனைவருமே பயன்படுத்தும் கார் என்றால், அது அம்பாஸடர் மட்டும்தான். ஆனால், இன்று இது அரசு அதிகாரிகளும், டிராவல்ஸ் ஆப்ரேட்டர்களும் மட்டுமே பயன்படுத்தும் காராக ஆகிவிட்டது. உறுதியான கட்டுமானம், தாராளமான இடவசதி, எத்தனை பேர் அமர்ந்தாலும் ஈடு கொடுக்கும் இன்ஜின், எப்படிப்பட்ட சாலையாக இருந்தாலும் கவலைப்படாமல் பயணிக்க முடியும் என்ற நம்பிக்கையை அளித்த கார் அம்பாஸடர். இந்த காரை ரேஸுக்கும் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடியுமா? இதன் சிறப்பம்சம் எது என்று கூறினால், குறைந்த பராமரிப்புச் செலவு, எங்கும் கிடைக்கும் உதிரி பாகங்கள், எந்த மெக்கானிக்காலும் சர்வீஸ் செய...

ஒரு பெண் தனது தாயை பற்றி எழுதியது

Image
  ஒரு பெண் தனது தாயை பற்றி எழுதியது *ப்ளீஸ்*  என்று ஒத்த வார்த்தை சொன்னாலே  உருகி கரைந்து விடுவார் என் அப்பா..  ஆனால் அம்மா அப்படி இல்லை.. இரும்பு மனுஷி.. ஒரு காரியத்தை அவரிடம் சாதித்து கொள்வது லேசுபட்ட விஷயம் இல்லை.. மண்டியிட வேண்டும், கெஞ்ச வேண்டும், மிஞ்ச வேண்டும், அப்பா வரும்வரை தூங்காமல் காத்திருந்து புகார் சொல்ல வேண்டும்.. எதுக்குமே மசிய மாட்டார்!!  கோபம் தலைக்கேறி அழுது புலம்புவதை தவிர நான் வேறு என்ன செய்ய முடியும்? கடைசியில்தான் தெரியும் நான் விரும்பியது 10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத ஒன்றாக இருந்திருக்கும்..  இப்படி அம்மாவின் பல கண்டிப்புக்களும், திட்டுக்களும் என்னை மீட்கவே செய்தது பிரமிப்பின் நீளம்!! வசவுகள் எல்லாமே எனக்கு தடுப்பு வேலிகளாகவே இருந்திருக்கிறது.. இறுதியில் தோற்று போனது ஒன்றுக்கும் உதவாத என் பிடிவாதமாகத்தான் இருந்திருக்கிறது!! கிச்சனில் அம்மா வியர்க்க விறுவிறுக்க எங்களுக்காக சுயமரியாதையை தொலைத்து நின்றிருந்த தருணங்கள் ஏராளம்.. *துணி காயப்போடு,* *பீரோவை அடுக்கி வை..* *மதியானத்தில் தூங்காதே..*  *எப்ப பாரு என்ன டிவி?*  *புக் எட...

Reasons Why Reading Books Should Be Part of Your Life:

Image
 Reasons Why Reading Books Should Be Part of Your Life: 1. Knowledge Highway: Books offer a vast reservoir of knowledge on virtually any topic imaginable. Dive deep into history, science, philosophy, or explore new hobbies and interests. 2. Enhanced Vocabulary: Regular reading exposes you to a wider range of vocabulary, improving your communication skills and comprehension. 3. Memory Boost: Studies suggest that reading can help sharpen your memory and cognitive function, keeping your mind active and engaged. 4. Stress Reduction: Curling up with a good book can be a form of mental escape, offering a temporary reprieve from daily anxieties and a chance to unwind. 5. Improved Focus and Concentration: In today's fast-paced world filled with distractions, reading strengthens your ability to focus and concentrate for extended periods. 6. Empathy and Perspective: Stepping into the shoes of fictional characters allows you to develop empathy and gain a deeper understanding of different pers...

இப்போதுதான் பிறந்தது போலிருக்கிறது அதற்குள் ஓராண்டு முடிந்து விட்டது

Image
 இப்போதுதான் பிறந்தது போலிருக்கிறது அதற்குள் ஓராண்டு முடிந்து விட்டது பெரிதாய்  ஏதேனும் அதிசயம் நிகழ்ந்து வாழ்வே தலைகீழாக மாறிவிட வேண்டுமெனும்  நப்பாசையில்தான்  எப்போதும்போல இவ்வாண்டும் துவங்கியது அப்படியெல்லாம்  ஆவதற்கு  வெறும் மூன்று மணிநேர சினிமா இல்லையே  வாழ்வு  வசந்தங்கள் வர இன்னும் காலமெடுக்கலாம் அதுவரை  எஞ்சியிருக்கும் கொஞ்சம் நம்பிக்கைகள் கொஞ்சம் பிரார்த்தனைகள் கொஞ்சம் கனவுகளோடு எப்போதும் போல புன்னகைத்து  முன் செல்லலாம்  பின்னும் கூட இப்போதுதான் பிறந்தது போலிருக்கிறது அதற்குள்  ஓர் ஆண்டே முடிந்து விட்டது

இவரு யாரு தெரியுமா ஒரு காலம் இவர் வாழ்ந்த வாழ்க்கை எப்படி என்று பற்றி ஞாபகம் இருக்கா. 1980 க்கு முற்பட்ட காலங்களில்

Image
 இவரு யாரு தெரியுமா ஒரு காலம் இவர் வாழ்ந்த வாழ்க்கை எப்படி என்று பற்றி ஞாபகம் இருக்கா. 1980 க்கு முற்பட்ட காலங்களில்  மிகவும் பேர் போன பெட்ரோல் மெட்ஸ் கீழ் உள்ள டேங்க் இல் இரண்டு கருவிகள் உண்டு ஒன்று காற்றை நிறப்ப மற்றொன்று காற்றை திறந்து மண்ணெண்ணெயை நிபல் மெண்டலுக்கு அனுப்பி வைக்க.  மண்ணெண்ணெய் ஊற்றி காற்றை  pomp செய்து நிரப்பி மென்டல் என்று சொல்லும் திரியை வட்டமாக இருக்கும் கண்ணாடிக் கூட்டுக்குள் உள்ள சின்ன ஒரு சுடப்பட்ட  மண்ணில் சல்லாடை போன்ற ஒரு பாத்திரம் (அதன் பெயர் மறந்து விட்டேன்)  அதில் மென்டல் திரியை கட்டி அப்புறமாக கீழே படத்தில் காணப்படும் டேங்க் அதில் காற்றை மெல்லமாக திறக்கும் கருவி மூலமாக  நிபல் பின் அதற்கு மண்ணெண்ணெயை பாயச் செய்து மேலே உள்ள அந்த இடைவெளி அதில் தீக்குச்சியை பற்ற வைத்து  மெல்லமாக வாயால் ஊதி மெண்டலுக்கு நெருப்பை பரவச் செய்து அதன் பின் மறுபடியும் காற்றடித்து நிபல் பின் அஜ்ஜஸ்ட் செய்து வைத்து பளிச் என்று வரும் வெளிச்சம் அத்தோடு வரும் ஸ்... ஸ்.. எனும் மென்மையான சத்தம் பிரகாசமாக காட்சி தரும். அப்பொழுது மேலே ஒரு இடத்தில் தொங்க...

வானவில்லை ஒரு பென்சில் ஓவியமாய் தீட்டிக் காட்ட முயல்வது என் அன்பை

Image
  வானவில்லை ஒரு பென்சில் ஓவியமாய் தீட்டிக் காட்ட முயல்வது என் அன்பை உனக்கு சொல்ல முயன்று  தோற்பது பறவையின் நிழல்  பூமியிலிருந்து மெல்ல மறைவது உன்னில் சிறுகச் சிறுக  கரைந்து வெளிச்சமாவது ஒவ்வொரு பூவிலும் தன் தொப்புள் குழியை தேடிக் கொண்டிருந்த வண்டு ஒரு மாங்கனிக்குள்  தன் கருவறையை கண்டு கொண்டது நீ எனக்கு உன் மடி ஈந்தாய்

எப்பவுமே ஓவர் மெச்சூர்டா இருக்கனும்ன்னு யோசிக்காத..ஒரு நாள,

Image
  எப்பவுமே ஓவர் மெச்சூர்டா இருக்கனும்ன்னு யோசிக்காத..ஒரு நாள, ஒரு நேரத்த உனக்குன்னு மட்டும் எடுத்துக்க, உனக்குப் பிடிச்சத செய், யார் என்ன நினைப்பாங்க ஏது நினைப்பாங்கன்னல்லாம் மைண்ட் பண்ணாத,  விருப்பமானத சாப்பிடு, சமைக்கத் தோணினா சமை, டான்ஸ் ஆடப்போறியா ஆடு, விளையாடப்போறியா போய் விளையாடு,நீ சின்ன வயசுல எதுல பைத்தியமா இருந்தியோ அத திரும்ப செஞ்சு ஞாபகப்படுத்திக்க, வேலைக்கு போய்ட்டம், கல்யானம் முடிச்சிட்டம், பிள்ளை இருக்கு, வயசாகிடுச்சின்னு காலம் போக போக உன்ன அறியாமலையே உனக்கு ஒரு ப்ரசர் வந்துட்டே இருக்கும், சுற்றி இருக்குறவங்க மாறிட்டே இருப்பாங்க, உன்ன நோக்கின தேவைகள் கூடும், இந்தக் காலம் உன்ன ஒரு கட்டத்துக்கு மேல நிம்மதியா இருக்கவே விடாது, எப்பவுமே responsible person ah இருந்தியன்னு வை அந்த மெண்டல் ப்ரசரே உன்ன நீ வெறுக்குறத்துக்கு ஆளாக்கிரும்! ஒரு நாளாவது எல்லாத்தையும் மறந்து உன்ன நீயே சந்தோசமா வச்சிக்கனும் , self love தான் இங்க எல்லாமே!  நாம வாழ்ற வாழ்க்கையே temporary  இதுல..வர்ற பிரச்சினைக்கு Permanent Solution தேடறது முட்டாள்தனம் புரியுதா!

Life முழுக்க rejectionஅ மட்டுமே face பண்ணிக்கிட்டு இருக்கிற ஒருத்தன்

Image
 Life முழுக்க rejectionஅ மட்டுமே face பண்ணிக்கிட்டு இருக்கிற ஒருத்தன் கையைப் பிடிச்சி எல்லாம் சரி ஆகும். நான் இருக்கன் என்கிற ஒரு நம்பிக்கைய கொடுத்துப் பாருங்களன். இத்தனை கால காயங்களை மறந்து புது மனுசனா தன்னைத்தானே அவன் மாற்றிப்பான். அவனுக்கான பெரிய ஆறுதலா ஏன் அவனுக்கு கிடைச்ச பொக்கிஷமா உங்கள கண்டிப்பா ஒருநாள் கொண்டாடுவான். Successல யாருவேணும்னாலும் கூட இருக்கலாம். Failuresல கூட இருக்கிறவங்க எல்லாம் வரம்.  பட்டுப்போன மரத்தின் கிளைகளில் அமர்ந்திருக்கும் பட்சிகளுக்கே  தெரியும். அந்த மரம் தம்மை எவ்நிலையிலும் தாங்கிக்கொள்ளும் என்பது.  அதுபோலவே சிலரின் வரவு நம் வாழ்வை அர்த்தப்படுத்தும்...!

PAIN RELIEF POSITION

Image
 

மனுசன போட்டு வதைக்காம அப்படியே ஏத்துகிட்டு வாழ பழகுங்க 25 வயசு ஆகுனா எப்ப கல்யாணம்னு கேக்குறீங்க

Image
 மனுசன போட்டு வதைக்காம  அப்படியே ஏத்துகிட்டு  வாழ பழகுங்க  25 வயசு ஆகுனா எப்ப கல்யாணம்னு கேக்குறீங்க  பயலுக தாடிய வளத்த காடையனுங்கனு சொல்றீங்க  தாடி மீசை இல்லாம இருந்தா ஏன்  பொம்பளை மாதிரி இருக்கனு கேக்குறீங்க ஒருத்தன் தனிகட்டயா இருந்தா இப்படியே இருந்து என்னா பண்ண போறனு கேக்குறீங்க  புதுசா கல்யாணம் பண்ணவங்கிட்ட போய் எதும் விஷேசம் இல்லையானு கேக்குறீங்க  லவ் பண்றவன்கிட்ட போய்டு இந்த காதல் எல்லாம் பொய்னுங்குறீங்க நல்லா படிக்கிறவன் கிட்ட போய்டு இப்பயெல்லாம் படிச்சவனுக்கு எங்க வேலைனு சொல்றீங்க  படிக்காதவன்கிட்ட போய்ட்டு இப்ப எல்லாம் படிச்சா தான் வேலைனு சொல்லறீங்க  மூஞ்சில ஏன் பரு வந்துருக்கு ஏன் முடி கொட்டுது  ஏன் மெலிவா இருக்க ஏன் குண்டாருக்க இவ்வளவு தானா சம்பளம் இப்படி கேள்வி கேட்டுக் கேட்டு சாகடிக்காதீங்க  அவங்க அவங்க வாழ்க்கைய அவங்க அவங்க வாழ்துப்பாங்க தயவு செய்து வதைக்காதீங்கடா